ஐபிஎல் எலிமினேட்டர் | ரோஹித் சர்மா அதிரடி... குஜராத் அணிக்கு 229 ரன்கள் இலக்கு!
10 அணிகள் இடையிலான 18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பஞ்சாப் – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் குவாலிஃபையர் போட்டி நேற்று (மே.29) நடைபெற்றது. இதில், பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தொடர்ந்து, எலிமினேட்டர் போட்டியில் குஜராத் – மும்பை அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹத் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ரன்களை குவித்தனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் அவுட் ஆனார். இவர்களை அடுத்து களம் கண்ட திலக் வர்மா 25 ரன்களிலும், நமன் திர் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடி ரன்களை குவித்த ரோஹித் சர்மா 81 ரன்களில் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 228 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். குஜராத் அணியின் தரப்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாட உள்ளது.