ஐபிஎல் | தோனி அதிரடி... லக்னோவை வீழ்த்தி சென்னை அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ - சென்னை சென்னை அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆ மார்க்ரம் 6 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கை கோர்த்த தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் - கேப்டன் ரிஷப் பண்ட் ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. இதில் மிட்செல் மார்ஷ் 30 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஆயுஷ் பதோனி 22 ரன்களில் வெளியேறினார். ரிஷப் பண்ட் சதம் அடித்த நிலையில் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் அடித்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் பதிரனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷேக் ரஷீத் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் கண்ட ராகுல் திரிபாதி 9 ரன்களில் அவுட் ஆனார். ரச்சின் ரவீந்த்ரா 37 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த ஜடேஜா 7 ரன்களில் வெளியேறினார். விஜய் சங்கர் 9 ரன்களில் வெளியேற, 30 பந்துகளில் 56 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி களமிறங்கினார். சிவம் துபே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் தோனி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.
இதனால் இறுதி ஓவர்களில் ஆட்டம் சென்னை அணிக்கு சாதமாக அமைந்தது. இறுதியில் சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. இதன்மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. கேப்டன் தோனி 11 பந்துகளில் 26 ரன்களுடனும் (4 பவுண்டரிகள், 1 சிக்ஸர்), சிவம் துபே 43 ரன்களுடனும் (37 பந்துகள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். லக்னோ அணியில் ரவி பிஷ்னோய் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.