For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#iPhone மோகம் | ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள போனை ஆர்டர் செய்து டெலிவரி ஏஜென்டை கொன்ற கொடூரர்கள்!

10:34 AM Oct 01, 2024 IST | Web Editor
 iphone மோகம்   ரூ 1 50 லட்சம் மதிப்புள்ள போனை ஆர்டர் செய்து டெலிவரி ஏஜென்டை கொன்ற கொடூரர்கள்
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த டெலிவரி மேன் (35) ஒருவர் ஐபோனை டெலிவரி செய்யச் சென்ற போது இருவரால் கொல்லப்பட்டார். ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனுக்காக அவரை கொலை செய்த அவர்கள், கால்வாயில் உடலை வீசி உள்ளனர்.

Advertisement

இது சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் ஷஷாங்க் சிங் கூறுகையில், சின்ஹாட்டைச் சேர்ந்த கஜனன், பிளிப்கார்ட்டில் இருந்து சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். மேலும் கேஷ் ஆன் டெலிவரி (COD) கட்டண விருப்பத்தை அவர் தேர்வு செய்துள்ளார். பாரத் சாஹு என்ற அந்த டெலிவரி பாய் செப். 23-ந்தேதி கஜனனுக்கு ஐபோனை டெலிவரி செய்யச் சென்றார்.

அப்போது சாஹுவை கஜனனும் அவரது நண்பரும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். அவரது உடலை ஒரு சாக்கு பையில் வைத்து இந்திரா கால்வாயில் வீசி உள்ளனர். சாஹு 2 நாட்களாக வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் செப். 25 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சாஹுவின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவனது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில், போலீசார் கஜனனின் எண்ணை கண்டுபிடித்து, அவரது நண்பர் ஆகாஷை தொடர்பு கொண்டனர். போலீஸ் விசாரணையில், ஆகாஷ் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், உடலை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையின் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement