For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள் | நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த #Exclusive!

12:54 PM Oct 04, 2024 IST | Web Editor
மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள்   நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த   exclusive
Advertisement

வைகை நதியை சீரமைக்க நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் கேட்டு, மிரட்டல் வருவதாக மதுரை ஆதினம் நியூஸ்7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக, ஆதீனம் நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். வைகை நதியை சீரமைக்க, நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் கேட்டு மிரட்டல் வருவதாக அப்போது அவர் தெரிவித்தார். அடையாளம் தெரியாத, நேரில் வந்த மூன்று நபர்கள் பணம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். ஆதினம் தரப்பில் பணம் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே அந்த மூன்று பேர் மதுரை ஆதினத்தை தரக்குறைவாக பேசியுள்ளனர்.

“வைகை நதியை சுத்தம் செய்வது மிகப்பெரிய பணி. அதை இவர்கள் எப்படி செய்ய முடியும்?” எனவும் ஆதினம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மிரட்டல் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க விரும்பவில்லை என ஆதினம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
Advertisement