For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெண் காவலர்கள் குறித்த நேர்காணல் - மன்னிப்பு கோரியது ‘ரெட் பிக்ஸ்’ நிறுவனம்!

09:29 PM May 15, 2024 IST | Web Editor
பெண் காவலர்கள் குறித்த நேர்காணல்   மன்னிப்பு கோரியது ‘ரெட் பிக்ஸ்’ நிறுவனம்
Advertisement

“பெண் காவலர்களின் மனதை புண்படுத்தும் படியான வீடியோவை ஒளிப்பரப்பியதற்காக ரெட் பிக்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

Advertisement

பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் நிறுவனமான ரெட் பிக்ஸ் சார்பில் ஒளிப்பரப்பிற்காக மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிறுவனத்தின் மேலாளர் ஜேன் பெலிக்ஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் நமது  ‘ரெட் பிக்ஸ்’ ஊடகத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக ரெட் பிக்ஸ் ஊடகம் கருதுகிறது.

சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம்திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி, வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் பிரைவேட் செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

Tags :
Advertisement