For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் 10 ஆம் தேதி நேர்காணல் - திமுக அறிவிப்பு!

09:35 PM Mar 07, 2024 IST | Web Editor
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் 10 ஆம் தேதி நேர்காணல்   திமுக அறிவிப்பு
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் வரும் 10ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி திமுக தலைமை அலுவலகத்தில் விண்ணப்பம் தந்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.

இந்நேர்காணலின்போது, அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டக் திமுக செயலாளர்கள் மட்டுமே இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். வேட்புமனு அளித்தவர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement