For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் ! - இன்றிரவு மீண்டும் பேச்சுவார்த்தை...

07:24 PM Feb 14, 2024 IST | Web Editor
தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்     இன்றிரவு மீண்டும் பேச்சுவார்த்தை
Advertisement

டெல்லியில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகளுடன் இன்றிரவு மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பஞ்சாபிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை டெல்லி சலோ பேரணியைத் தொடங்கினர். இந்தப் பேரணியை பஞ்சாப் அரசு தடுக்கவில்லை. பேரணி இரண்டு மணி நேரத்தில் பஞ்சாப் ஹரியாணா எல்லையைத் தொட்டதும் அங்குள்ள ஷம்பு எல்லையில் விவசாயிகளை அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை மீறிச் செல்ல விவசாயிகள் முயன்றபோது போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து பஞ்சாபின் மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்ட பேரணி இன்று மீண்டும் தொடங்கியது. எந்தக் காரணம் கொண்டும் விவசாயிகளை தங்களின் எல்லையைத் தாண்டவிடக் கூடாது என்று உறுதியாக உள்ள ஹரியாணா அரசு, எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதனிடையே, பஞ்சாப் - ஹரியாணா எல்லையான ஷம்புவில் இருந்து விவசாயிகளின் பேரணி இரண்டாவது நாளில் இன்று மீண்டும் தொடங்கியபோது தடுப்புகளை விவசாயிகள் நெருங்க விடாமல் தடுத்தனர். இதனால் விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஹரியாணா போலீஸார் பல முறை கண்ணீர் புகை குண்டு வீசினர்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸார் தாக்குதல் நடத்த பஞ்சாப் அரசு அனுமதிக்கக் கூடாது என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர், "பஞ்சாப் அரசு அதன் பிராந்திய இறையாண்மையை பாதுகாக்க வேண்டும். நமது மண்ணில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பஞ்சாபி விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸ் நடத்தும் தாக்குதலை தடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய இரண்டாவது நாள் போராட்டத்தில் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டபோதிலும் அவர்கள் இன்னும் ஹரியாணா எல்லைக்குள் நுழையவில்லை. இந்த நிலையில், விவசாயிகளின் பேரணி போராட்டத்தை முன்னிட்டு டெல்லியில் இரண்டாவது நாளாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. டெல்லி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் நீண்ட வரிசையில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

இதனிடையே, வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரை அமல்படுத்தப்படும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வமான உறுதி வழங்கப்படும் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவுகிறது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்களில் தலைவர்களுடன் மத்திய அரசு இன்றிரவு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement