For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியாவின் 5 சதங்கள் வீண் - டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து அணி!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது...
06:50 AM Jun 25, 2025 IST | Web Editor
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது...
இந்தியாவின் 5 சதங்கள் வீண்   டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து அணி
Advertisement

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிது. லீட்சில் நடைபெற்று இந்த டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களும், சுப்மன் கில் 147 ரன்களும், ரிஷப் பண்ட் 134 ரன்களும் அடித்தனர்.

Advertisement

முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டான இந்திய அணி 471 ரன்களை குவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் அடித்து ஆல்வுட்டானது.  பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி. இதில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 137 ரன்களும் ரிஷப் பண்ட் 118 ரன்களும் அடித்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு 365 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது.

இரண்டாவது இன்னிங்கிஸில் இங்கிலாந்து அணி தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கேட் இருவரும் களமிறங்கிறனர். இருவரும் அதிரடியாக விளையாடியதில் பென் டக்கேட் 149 ரன்கள் குவித்தார். அதே போல் தனது பங்கிற்கு கிராலி 69 ரன்கள் அடித்து அவுட்டானார். அதன் பின்னர் வந்த ஜோ ரூட் அரைசதம் விளாசினார். இறுதியாக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களும், ஜேமி ஸ்மித் 44* ரன்களும் அடித்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி  5 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்கள் அடித்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது.

Tags :
Advertisement