For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திரில் வெற்றிப் பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி!

08:40 AM Jun 20, 2024 IST | Web Editor
திரில் வெற்றிப் பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி
Advertisement

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. 

Advertisement

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களை குவித்தது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா சதமடித்தார். ஹர்மன்பிரித் கவுர் 103 ரன்னிலும், ரிச்சா கோஷ் 25 ரன்னிலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் பூஜா வஸ்த்ராகர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Tags :
Advertisement