Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துளளார்.
03:07 PM May 09, 2025 IST | Web Editor
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துளளார்.
Advertisement

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

Advertisement

இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கிடையே, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இந்த சூழலை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தன. அதேவேளை, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலரும் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில், நேற்று நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்ததாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் அந்நாடு தெரிவித்தது. இதனிடையே, நேற்று இரவு முதல் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், ஆந்திர பிரதேச மாநிலம் சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் முரளி நாயக் என்பவர் வீர மரணம் அடைதுள்ளார்.

அவரின் உடல் நாளை அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவ வீரர் முரளி நாயக்கின் மறைவுக்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பெனுகொண்டா சட்டமன்றத் தொகுதி, கோரண்ட்லா மண்டலத்தைச் சேர்ந்த முரளி நாயக் என்ற ராணுவ வீரரின் உயிரிழப்பு மிகுந்த வருத்தமளிக்கிறது. நாட்டிற்காக தனது இன்னுயிரை ஈந்த முரளி நாயக்கிற்கு எனது அஞ்சலி. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
"Operation SindoorIndiaindia pakistanIndian ArmyIndian Army Forcesnews7 tamilNews7 Tamil Updatespakistan
Advertisement
Next Article