For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Nepal ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 14 பேர் உயிரிழப்பு!

01:56 PM Aug 23, 2024 IST | Web Editor
 nepal ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து  14 பேர் உயிரிழப்பு
Advertisement

நேபாளத்தில் இந்தியப் பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

உத்தரப் பிரதேச பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று, 40 பயணிகளுடன் நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்ததாக நேபாள காவல்துறையினர் இன்று தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தனாஹூன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீப்குமார் ராயா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது விபத்து குறித்து அவர் கூறியதாவது:

“ ‘UP FT 7623’ என்ற பதிவெண் கொண்ட பேருந்து ஆற்றில் விழுந்து கரையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.போகாராவில் இருந்து நேபாள தலைநகரான காத்மாண்டுவுக்கு செல்லும் போது பேருந்து விபத்துக்குள்ளானதாக நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியர்கள் பலர் இந்த பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : ‘வாழை’ திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட #MariSelvaraj !

இதற்கிடையில், இந்த பேருந்து விபத்து சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த யாராவது பேருந்தில் இருந்தார்களா என்பதை பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விபத்தில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement