For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாராலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீரருக்கு தடை!

11:24 AM Aug 13, 2024 IST | Web Editor
பாராலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீரருக்கு தடை
Advertisement

பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய பாட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்துக்கு 18 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக இந்திய பாராலிம்பிக் பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்துக்கு 18 மாதங்கள் தடை விதித்து சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விரைவில் தொடங்க உள்ள பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் அவர் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில்  இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார். கடந்த 12 மாதங்களில் 3 முறை ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் பிரமோத் பகத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 1ஆம் தேதி ஊக்க மருந்து தடுப்பு சோதனையை எதிர்த்து பிரமோத் பகத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூலை 29ஆம் தேதி நிராகரித்தது.

இந்நிலையில், அவர் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள 18 மாதங்கள் தடை விதித்து சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்து உள்ளது.

Tags :
Advertisement