Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாகிஸ்தானுக்கு ரூ.6,800 கோடி நிதி உதவி - இந்தியா கடும் கண்டனம்!

பாகிஸ்தானுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.6,800 கோடி நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
07:12 AM Jun 05, 2025 IST | Web Editor
பாகிஸ்தானுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.6,800 கோடி நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
Advertisement

ஆசிய வளர்ச்சி வங்கி பாகிஸ்தானுக்கு ரூ. 6,800 கோடி நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் நீண்ட காலமாகவே தொடர்ந்து நிதி உதவி செய்து பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் ஆசிய வளர்ச்சி வங்கி, பாகிஸ்தானை மேம்படுத்துவதற்கு ரூ.6,800 கோடி கடன் உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மாதம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்திடம் பாகிஸ்தான் நிதி கோரிய போது இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

தற்போது ஆசிய வளர்ச்சி வங்கி, ரூ.6,800 கோடி கடன் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் உதவி அளிக்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்தது. முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்த பாகிஸ்தான் பலமுறை தவறிவிட்டது என்ற அடிப்படையில், இதற்கு இந்தியா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

Tags :
ADBasiandevelpmentbankBankcondemnsfinancial aidGDPIndiaindiapakistanJammuKashmirpahalkampakistan
Advertisement
Next Article