For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜிம்பாப்வே அணிக்கு 168ரன்கள் இலக்காக நிர்ணயித்த இந்தியா!

06:34 PM Jul 14, 2024 IST | Web Editor
ஜிம்பாப்வே அணிக்கு 168ரன்கள் இலக்காக நிர்ணயித்த இந்தியா
Advertisement

5வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு 168ரன்கள் இலக்காக இந்தியா அணி நிர்ணயித்துள்ளது.

Advertisement

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது .

நேற்று நடைபெற்ற 4வது போட்டியில் முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதல் அடித்து விளையாடி அதிரடியாக ரன் எண்ணிக்கைய அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து 1 விக்கெட்டை கூட இழக்காமல் இந்திய அணி அபாரமாக வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என கணக்கில் கைப்பற்றியது. இன்று நடைபெற்று வரும் கடைசி  டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஷ்வால் களமிறங்கினர். இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்ஸன் ஜோடி களமிறங்கியது. அபிஷேக்கும் 14ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற சஞ்சு சாம்ஸன் நின்று ஆடி அரை சதம் விளாசினார்.

சஞ்சு சாம்ஸன் 58ரன்களில் 5வது விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார். அபிஷேக்கிற்கு பிறகு களமிறங்கிய ரியான் பராக் மற்றும் சிவம் துபே தங்கள் பங்கிற்கு ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6விக்கெட் இழப்பிற்கு 167ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு இந்திய அணி 168ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

Tags :
Advertisement