Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Canada -வில் இந்திய இளைஞா் உயிரிழப்பு; பிறந்தநாளில் சோகம்!

06:58 AM Sep 17, 2024 IST | Web Editor
Advertisement

கனடாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏரியில் குளிக்கச் சென்ற இந்திய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Advertisement

தெலங்கானாவில் உள்ள ரெங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்த பிரனீத் என்ற இளைஞர் கனடாவில் உயர்கல்வியை நிறைவு செய்துவிட்டு அங்கு தங்கி பணி தேடி வந்துள்ளார். கடந்த 14ம் தேதி தனது பிறந்தநாளை நண்பர்களுடன் அவர் கொண்டாடினார். அருகில் இருந்த ஏரிக்கு தன்னுடைய மூத்த சகோதரர் மற்றும் பிற நண்பர்களுடன் அவர் குளிக்கச் சென்றார்.

அப்போது பிரனீத் நீரில் மூழ்கினார். அவருடன் இருந்தவர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கனடா மீட்புப் படையினரிடம் தகவல் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில், தகவல் அறிந்து வந்த கனடா மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர்ர பிரனீத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள் : ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் – முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்ட #Congress கட்சி!

இந்நிலையில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரின் உடலை கனடா மீட்புப்படையினர் மீட்டனர். பிரனீத்தின் நண்பா்கள் மூலம் தங்கள் மகன் உயிரிழந்த செய்தியை தெரிந்துகொண்டதாக அவரின் பெற்றோர் கூறினர். பிரனீத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags :
birthday celebrationCanadadeathIndialakeNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article