For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்...

06:59 AM Nov 20, 2023 IST | Web Editor
உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி   முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆறுதல்
Advertisement

உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உள்ளார்.

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவிடம் தோற்று நழுவ விட்டது. குறிப்பாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 10 வெற்றிகளை பெற்ற இந்திய அணியில் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்ததால் இம்முறை வெற்றி உறுதி என்று ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 241 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 134, லபுஸ்ஷேன் 58 ரன்கள் எடுத்ததால் 43 ஓவரிலேயே எளிதாக வென்றது.

இதையடுத்து உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உள்ளார். அவரது தனது X வலைத்தளப் பக்கத்தில், "உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அரைஇறுதி போட்டி வரை தனது அசாத்திய விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு எனது பாராட்டுக்கள். போட்டிக்கான உங்களுடைய நெகிழ்ச்சி மற்றும் ஆர்வம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது" என பதிவிட்டு உள்ளார்.

Advertisement