For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிகரிக்கும் ஜெஎன்.1 வகை கொரோனா - தமிழ்நாட்டில் 4 பேருக்கு பாதிப்பு உறுதி!

04:08 PM Dec 25, 2023 IST | Web Editor
அதிகரிக்கும் ஜெஎன் 1 வகை கொரோனா   தமிழ்நாட்டில் 4 பேருக்கு பாதிப்பு உறுதி
Advertisement

இந்தியாவில் புதிதாக பரவி வரும் ஜெஎன்.1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில், நேற்று ஒரே நாளில் மட்டும் 656 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகரித்து வரும் தொற்றுக்கு ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

மேலும் தற்போதைய ஆய்வுகளின்படி, ஜெஎன்.1ல் ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இன்று மட்டும் ஜெஎன்.1ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவராவர்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

"ஜே.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. குளிர்காலம் என்பதால் ஜே.என்.1 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது; இதன் வீரியம் குறைவுதான். பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர்.
புதிய வகை கொரோனாவால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன.

உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது. புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement