Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்! பொங்கி வரும் காவிரி!

10:06 PM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,25,500 கன அடியில் இருந்து 1,70,500 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Advertisement

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது.  இந்த அணையின் மொத்த உயரம் 124 அடி ஆகும்.  அணையின் பாதுகாப்பு கருதி 120 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.  அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமானதால் அணையில் இருந்து கடந்த 28ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனையடுத்து அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வந்தது.  நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 118.41 அடியாக உயர்ந்ததால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.  இதனிடையே நேற்று கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.  இதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கும் நேற்று நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,25,500 கனஅடியாக இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,25,500 கன அடியில் இருந்து 1,70,500 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags :
CauveryDeltaMetturMettur damSalemtamil nadu
Advertisement
Next Article