For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிக்கலில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா | உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

08:54 PM Mar 05, 2024 IST | Web Editor
சிக்கலில் பிரகாஷ்ராஜ்  பாபி சிம்ஹா   உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Advertisement

நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்கா ஆகியோர் உரிய அனுமதியின்றி கொடைக்கானலில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டிய நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய பிரகாஷ்ராஜ் மற்றும் பாபிசிம்ஹாவுக்கு, கட்டுமான பணிகளை நிறுத்துமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நோட்டீஸ் வழங்கிய பின்னர் இருவரும் அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement