Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோவில்பட்டியில் தொழிலதிபர் வீட்டில் ரூ. 48 லட்சம் பணம் கொள்ளை!

09:07 AM Apr 09, 2024 IST | Web Editor
Advertisement

கோவில்பட்டியில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெரு பகுதியில் வசித்து
வருபவர் சிங்கராஜ். இவர் கயத்தார் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டார
வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் மனோகரன் ரியல் எஸ்டேட்
தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் மனோகரன் மற்றும் மனைவி அவரது தாயார் அனைவரும் சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்க்கு சென்றுள்ளனர். வீட்டில் சிங்கராஜ் மட்டும் இருந்து வந்தார். நேற்று இரவு சிங்கராஜ் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 48 லட்ச ரூபாய் பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சிங்கராஜ் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் துறையினர் மற்றும் கைரேகை பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இந்த திருட்டுச் சம்பவத்தில்
ஈடுபட்டுள்ள மர்ம நபர் யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.

தொழிலதிபர் வீட்டில் ரூ.48 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
CrimekovilpattiRobberyTheft
Advertisement
Next Article