For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ரூ.40 செலுத்தி எங்கும் செல்லலாம்" - புதிய திட்டம் அறிமுகம்!

04:53 PM Feb 29, 2024 IST | Web Editor
 சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ரூ 40 செலுத்தி எங்கும் செல்லலாம்    புதிய திட்டம் அறிமுகம்
Advertisement

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ரூ.40 செலுத்தி மாநகரப் பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.  இச்செயலியின் மூலம் நிர்வாகத்தினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகளை தெரிந்து கொள்ளவும், பணியாள்கள் விடுமுறைக்காக விண்ணப்பத்திடவும் முடியும்.  மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும்,  பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தையும் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் மார்ச் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.  இந்நிகழ்ச்சியில் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ்,  அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன்,  மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் க.குணசேகரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags :
Advertisement