For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கோவையில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைக்க உத்தரவிட முடியாது!" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

01:11 PM Apr 30, 2024 IST | Web Editor
 கோவையில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைக்க உத்தரவிட முடியாது     சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement

கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது.  3 ஆம் கட்ட தேர்தல் மே.7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் என்பவர் வெளிநாட்டில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.  இதையடுத்து, கடந்த 19 ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக கோவைக்கு வந்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்!” – மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்பதால் அவரையும் அவரின்
மனைவியையும் வாக்களிக்க அனுமதிக்கவில்லை.  இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார். புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி வழக்கு தொடர்ந்தார்.

அதில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜி.சந்திரசேகரன்
அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில், கடந்த ஜனவரி மாதம்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும், மனுதாரர் கோவை தொகுதில்
வசிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே மனுதாரரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளிட்ட போது
மனுதாரர் ஏன் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என வினவிய நீதிபதிகள்,
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags :
Advertisement