For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு!

04:12 PM Jun 04, 2024 IST | Web Editor
ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு
Advertisement

ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 20 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 

Advertisement

18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன. இதில் அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு மட்டும் கடந்த 2 ஆம் தேதி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிமில் எஸ்கேஎம்மும் முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டன.

இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலத்திற்கும், ஒடிசா மாநிலத்திற்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து களம் கண்டது.

ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில், சந்திரபாபு நாயுடு கட்சி 130 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அவரது கூட்டணியில் உள்ள பவன் கல்யாண் கட்சி 20 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், பாஜக 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 19 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலை முதலே இதே நிலை தொடர்வதால் தெலுங்கு தேசம்தான் ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகிவிட்டது. ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியினர் தங்கள் கட்சியின் வெற்றிக் கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர். ஆந்திரா முதல்வராக நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9இல் அமராவதியில் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement