“முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்” - பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘பைசன் -காளமாடன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட் ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.
நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும்
ஏன் வருகிறேன் என்றும்
உனக்கு தெரியும்
வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும்
ஆதலால் ….
நீ கதவுகளை அடைக்கிறாய்
நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன். 🦬
—
பைசன் (காளமாடன்)#BisonKaalamaadan 🦬@applausesocial… pic.twitter.com/8ACSMdys4B— Mari Selvaraj (@mari_selvaraj) March 7, 2025
இந்த நிலையில் பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது தொடர்பாக மாரிசெல்வராஜ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து, “நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும் ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும். வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும் ஆதலால் நீ கதவுகளை அடைக்கிறாய் நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்” என்ற படம் தொடர்பான சில கவிதை வரிகளை குறிபிட்டுள்ளார்.