For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இசையமைப்பாளர் இளையராஜா இசையில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பாசுரங்கள் அடங்கிய ஆல்பம் வெளியீடு!

08:21 AM Jun 27, 2024 IST | Web Editor
இசையமைப்பாளர் இளையராஜா இசையில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பாசுரங்கள் அடங்கிய ஆல்பம் வெளியீடு
Advertisement

இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகியுள்ள நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பாசுரங்கள் அடங்கிய சிறப்பு ஆல்பமான ‘திவ்ய பாசுரங்கள்’ கிருஷ்ணா கான சபையில் வெளியிடப்பட்டது.

Advertisement

இளையராஜா ஏற்கனவே திருவாசகம் உள்பட பல்வேறு ஆன்மிகம் மற்றும் திரையிசை  பாடல்களுக்கு இசையமைத்துள்ள நிலையில், தற்போது திவ்ய பாசுரங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நேற்று  நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு இளையராஜா பாசுரங்களை வெளியிட்டார்.

இதையும் படியுங்கள் : பில்லூர் அணையிலிருந்து 12,000 கன அடி நீர் வெளியேற்றம்! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பின்னர்,  நிகழ்ச்சியில்  பேசிய இளையராஜா கூறியதாவது,

“இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு அன்பான உள்ளங்களை சந்திப்பது பல்லாண்டு பல்லாண்டு நீண்டு கொண்டே போக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். திருவாசகத்திற்கு இசையமைத்த பிறகு திவ்ய பிரபந்தத்திற்கும் இசையமைக்க வேண்டும் என பலர் கேட்டு கொண்டனர்.

அது நடக்க வேண்டிய காலத்தில் தற்போது நடந்துள்ளது. இவ்விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வளவளவென்று மற்ற சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழாக்களை போல் இல்லாமல், இது சிறப்பாக இருந்தது"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement