For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்கள் பறிமுதல் - உயர்நீதிமன்றம் அதிரடி

09:32 AM Jun 07, 2024 IST | Web Editor
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்கள் பறிமுதல்   உயர்நீதிமன்றம் அதிரடி
Advertisement

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும்
அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னையில் தனியார் வாகனங்களில் காவல்துறை,  ஊடகம்,  வழக்கறிஞர் என
ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும்,  மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும்
சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது.  இந்த உத்தரவை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த உத்தரவிடக் கோரி,  சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில்,  "கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற உச்ச
நீதிமன்ற உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை.  வாகனங்களின்
முன் பக்கம், பின் பக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள்,  அரசியல் கட்சி தலைவர்கள்
படங்கள்,  நடிகர்கள் படங்களை ஒட்டத் தடை விதிக்க வேண்டும்.
பேருந்துகளின் பின்புறமும், பக்கவாட்டு பகுதிகளிலும் விளம்பரங்கள் செய்வதை
தடுக்க வேண்டும் என" கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி
முகமது சபிக் அமர்வு முன்பு நேற்று விசாரணக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள் "போக்குவரத்து விதிகளை மீறும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்" என மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும்,  தடை விதித்தும் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள்,  இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 20ம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி,  விசாரணையை தள்ளிவைத்தனர்.  அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement