Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழா முடிந்ததும் குழந்தை ராமரை குடும்பத்துடன் தரிசனம் செய்வேன்!” - அரவிந்த் கேஜரிவால்

09:18 PM Jan 17, 2024 IST | Web Editor
Advertisement

ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழா முடிந்ததும் குடும்பத்துடன் அயோத்திக்கு சென்று குழந்தை ராமரை தரிசனம் செய்ய உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லி அரசின் புனித யாத்திரைத் திட்டத்தின் கீழ் துவாரகாதீசர் கோயிலுக்குச் செல்லும் மூத்த குடிமக்களை சந்தித்த கேஜரிவால், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பாதுகாப்புக் காரணங்களுக்காக ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு ஒருவருக்கு மட்டுமே அனுமதிக் கடிதம் கிடைத்தது. தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ் கொடுக்க ஒரு குழு வரும் என்று சொன்னார்கள். ஆனால் யாரும் வரவில்லை. நான் என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குழந்தை ராமரை தரிசனம் செய்ய விரும்புகிறேன். எனது பெற்றோரும் குழந்தை ராமரை தரிசிக்க ஏங்குகிறார்கள். ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் விழாவுக்குப் பிறகு நான் எனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் குழந்தை ராமரை தரிசனம் செய்ய அயோத்திக்கு செல்வேன் என்று கேஜரிவால்தெரிவித்தார்.

Tags :
Ayodhyaayothiconsecrationnews7 tamilNews7 Tamil UpdatesRam Janm bhoomiRam LallaRam Mandirram templeRamlala
Advertisement
Next Article