For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“NDA கூட்டணியில் இராமநாதபுரத்தில் போட்டியிடுகிறேன்” -ஓ.பன்னீர்செல்வம்!

07:17 AM Mar 22, 2024 IST | Web Editor
“nda கூட்டணியில் இராமநாதபுரத்தில் போட்டியிடுகிறேன்”  ஓ பன்னீர்செல்வம்
Advertisement

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இராமநாதபுரத்தில் தான் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை பசுமை வழிச்சாலையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாக மோடி நல்ல ஆட்சி கொடுத்து வருகிறார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்தால் நாடு வளர்ச்சி
அடையும் . இரட்டை இலை சின்னத்திற்காகச் சட்டப் போராட்டத்தைத்
தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

தொண்டர்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளனர். தாமரை சின்னத்தில் போட்டியிட தங்களை பாஜக நிர்ப்பந்திக்கவில்லை. இராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் களம் காண உள்ளேன்.

தொண்டரை நிறுத்துவதை விட நானே தொகுதியில் நின்று என்னுடைய பலத்தைக் காண்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.இரட்டை இலையை எதிர்த்து நிற்கவில்லை இரட்டை இலையைப் பெறுவதற்காக ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணியில் நிற்கின்றோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement