சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன் - திருமாவளவன் பேட்டி!
‘என்னுடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிதம்பரம் தொகுதி என்னுடைய சொந்த தொகுதி. இங்கு தான் போட்டியிடுகின்றேன். இந்தத் தொகுதியில் தான் போட்டியிட முடியும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிக அளவில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். கர்நாடகாவில் 3 தொகுதிகளிலும், ஆந்திராவில் மூன்று தொகுதிகளிலும், கேரளாவில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு கட்சியினர் முன்வந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி 'இந்தியா' கூட்டணியில் போட்டியிடுகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.