Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன் - திருமாவளவன் பேட்டி!

01:11 PM Feb 27, 2024 IST | Web Editor
Advertisement

‘என்னுடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்’  என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

சிதம்பரம் தொகுதி என்னுடைய சொந்த தொகுதி.  இங்கு தான் போட்டியிடுகின்றேன். இந்தத் தொகுதியில் தான் போட்டியிட முடியும்.  இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிக அளவில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.  கர்நாடகாவில் 3 தொகுதிகளிலும்,  ஆந்திராவில் மூன்று தொகுதிகளிலும், கேரளாவில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு கட்சியினர் முன்வந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி 'இந்தியா' கூட்டணியில் போட்டியிடுகிறது.  திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Tags :
ChidambaramElection2024Parlimentary Electionthirumavalavan
Advertisement
Next Article