“தவெக-வை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை, சிறுபான்மையின மக்களை யாரும் ஏமாற்ற முடியாது” - அமைச்சர் ரகுபதி பேட்டி!
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “இன்றும் பாஜக நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி தான். தமிழ்நாட்டில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது, பாஜக மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்து தான் வாக்கு வாங்கியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தை நாங்கள் ஒரு கட்சியாக நினைக்கவில்லை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
சிறுபான்மையின மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் ஏமாளிகள் அல்ல யார் நீலி கண்ணீர் வடிக்கிறார்கள் யார் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் இதெல்லாம் அவர்களுக்கு தெரியும். அவர்களுக்கு உண்மையான நண்பன் யார் அவர்களுக்கு என்றைக்குமே தோழமையோடு இருக்கக்கூடியவர்கள் யார் என்பது சிறுபான்மையின சமூக மக்களுக்கு நன்றாக தெரியும். அது திராவிட இயக்கங்களை தவிர அதுவும் திமுகவை தவிர எந்த கட்சியையும் நம்ப தயாராக இல்லை.
எத்தனை அமலாக்கத்துறை சோதனை செய்தாலும் திமுக சட்டரீதியாக சந்திக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலேயே சோதனை செய்வதை நாங்கள் தடுத்த நிறுத்தவா முடியும் அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் குறைந்த அளவே நிரூபிக்கப்பட்டுள்ளது”
இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.