For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன் விரைவில் திரையில் பார்க்கலாம்” - சர்பிரைஸ் கொடுத்த நடிகை ரம்பா

08:14 AM Nov 01, 2023 IST | Web Editor
 கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன் விரைவில் திரையில் பார்க்கலாம்”   சர்பிரைஸ் கொடுத்த நடிகை ரம்பா
Advertisement

பிரபல கதாநாயகியாக விளங்கிய ரம்பா மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பிரபல கதாநாயகியாக விளங்கிய ரம்பா மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்பா நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தார். இந்நிலையில், வயதிற்கேற்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் திரைப்படங்களின் முன்னணி நடிகர்களான  ரஜினிகாந்த, கமல்ஹாசன், விஜய், அஜித் என பலருடனும் நடித்து  நட்சத்திர நடிகை ரம்பா திகழ்ந்தார்.  திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு கனடாவில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.  நடிகை ரம்பா நடித்த காலகட்டத்தில் திரையில் நடித்து வந்த சிம்ரன், லைலா, ஜோதிகா போன்ற நடிகைகள் இன்றும் பல முக்கிய படங்களில் நடித்து வருகின்றனர்.

தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா. 1993- ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகமானார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

உன்னருகே நான் இருந்தால் படத்தில் நடிகையாகவே அவர் நடித்திருப்பார். அப்போது நடிகர் பார்த்திபன் விவேக்கிடம் “சார் ரம்பா சார்” என சொல்லும் வசனம் மிகவும் பிரபலமான ஒன்று. அதேபோல “ஒரு ஸ்வீட் ஸ்டாலே பனியாரம் சாப்பிடுகிறதே” என பார்த்திபன் ரம்பாவை பார்த்து சொல்லும் வசனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்த ஒன்று.

இந்த நிலையில் திரையில் மீண்டும் நடிப்பது குறித்து நடிகை ரம்பா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது..

“ திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக்கன்னி அடையாளமும், புகழும் கிடைக்கும். அது வெகு சீக்கிரத்திலே எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு சில டிவிக்களில் ஷோ செய்தேன், ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்தபோது நடிப்பதை நிறுத்தி விட்டேன்.

இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும். ரசிகர்கள் என்னை ஞாபகமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது. சினிமாவை தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறேன்.

இப்போது சினிமாவின் ட்ரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. இப்போதும் சினிமா நண்பர்கள் உடன் பல விஷயங்கள் பேசிக்கொண்டு இருப்பேன். என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம் என்றார்.

Advertisement