For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மிகவும் மன வேதனை அடைந்தேன்" - குமரி அனந்தன் மறைவுக்கு விஜய் இரங்கல்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
11:09 AM Apr 09, 2025 IST | Web Editor
 மிகவும் மன வேதனை அடைந்தேன்    குமரி அனந்தன் மறைவுக்கு விஜய் இரங்கல்
Advertisement

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு மற்றும் சிறுநீர் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று (ஏப்.8) இரவு குமரி அனந்தன் சிசிக்கை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜருடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர். மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர். தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர். எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த குமரி அனந்தன் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்"

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement