For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“விஜயதரணியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறேன்” - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

01:47 PM Feb 25, 2024 IST | Jeni
“விஜயதரணியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறேன்”   சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
Advertisement

விஜயதரணியின் ராஜினாமாவை தான் ஏற்றுக்கொள்வதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Advertisement

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியாகி வந்தது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியில் பெண்கள் தலைமை இடத்துக்கு வரமுடியாத சூழல் இருப்பதாகவும், இந்த அதிருப்தியில் தான் அக்கட்சியை விட்டு வெளியேறிதாகவும் கூறினார். பாஜகவில் இணைந்த விஜயதரணி, காங். கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் சாடி வருகின்றனர்.

இதையடுத்து, விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அறிவித்தார். மேலும், சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இந்நிலையில், விஜயதரணியின் ராஜினாமாவை தான் ஏற்றுக்கொள்வதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : தொகுதி பங்கீடு : திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. இடையே இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜயதரணியின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படவில்லை. பாஜகவில் இணைந்த அவர், தான் கைப்பட எழுதிய பதவி விலகல் கடிதத்தை எனக்கு இணையதளம் வழியாக அனுப்பி வைத்தார். இன்று காலை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அதனை உறுதிப்படுத்தினார். அதன் அடிப்படையில் அவரது பதவி விலகலை நான் ஏற்றுக்கொள்கிறேன்”  என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement