Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘அவசரமாக விபத்தை உண்டாக்குங்கள்’ - வைரலாகும் எச்சரிக்கைப் பலகையின் வாசகம்!

09:35 PM Jul 03, 2024 IST | Web Editor
Advertisement

நெடுஞ்சாலைதுறை சார்பில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகை ஒன்றின் வாசகம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

கர்நாடகாவின் குடகு அருகே நெடுஞ்சாலை சார்பில் நிறுவப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகையில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது. அதில்,  “அவசரவே அபகதக்கே கரனா” என்ற கன்னட சொற்றொடரின் தவறான மொழிபெயர்ப்பாக ஆங்கிலத்தில் “அவசரமாக ஒரு விபத்தை உண்டாக்குங்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. இதன் உண்மையான மொழிபெயர்ப்பு "அதிக வேகமே விபத்துகளுக்கு காரணம்" ஆகும்.

தவறுதலாக இருக்கும் இந்த வாக்கிய புகைப்படத்தை கொடகு கனெக்ட் என்ற பயனர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து “அர்ஜென்ட் மேக் அன் ஆக்சிடென்ட் என்று எழுதப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இந்த அடையாளத்தை அப்படியே பின்பற்றினால், அர்த்தமற்றதாகி விடும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் கலாய்த்து பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Directional BoardKarnatakaKodaguViral
Advertisement
Next Article