Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆள் கடத்தல் வழக்கு - சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மற்றும் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரிடம் நடந்த விசாரணை நிறைவு!

ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மற்றும் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரிடம் நடந்த போலீஸ் விசாரணை நிறைவடைந்துள்ளது.
07:42 PM Jun 17, 2025 IST | Web Editor
ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மற்றும் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரிடம் நடந்த போலீஸ் விசாரணை நிறைவடைந்துள்ளது.
Advertisement

காதல் திருமண விவகாரம் தொடர்பாக சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது. தொடர்ந்து  வழக்கில் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமுக்கு தொடர்பு இருந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதையடுத்து அவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட  ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை(ஜூன்.18) விசாரணைக்கு வரவுள்ளது. இந்த சூழலில் திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஏடிஜிபி ஜெயராம், எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரை ஒரே இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணை முடிவடைந்துள்ளது. ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 20 மணி நேரமும், எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தியிடம் சுமார் 10 மணி நேரமும் விசாரணை நடைபெற்றது.

Tags :
ADGP JayaramJeganMoorthiKidnapCase
Advertisement
Next Article