Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கிரிக்கெட் பேட் பிடிப்பது எப்படி? | அமைச்சர் ரோஜாவுக்கு கற்றுக் கொடுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி!

05:07 PM Dec 26, 2023 IST | Web Editor
Advertisement

ஆடுதாம் ஆந்திரா (ஆடுவோம் ஆந்திரா)  எனும் போட்டியின் துவக்க விழாவில், அமைச்சர் ரோஜாவுக்கு கிரிக்கெட் பேட்டை கையாள்வது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பாடம் எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஆந்திரப் பிரதேசத்தில் ஆடுதாம் ஆந்திரா (ஆடுவோம் ஆந்திரா) என்ற பெயரிலான விளையாட்டுப் போட்டி இன்று(டிச.26) துவங்கியது.  அந்த மாநில அரசின் விளையாட்டுத் துறை நடத்தும் ஆடுதாம் ஆந்திரா விளையாட்டுப் போட்டி வரும் பிப். 10ம் தேதி வரை 5 கட்டங்களாக மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.  இப்போட்டிகளில் கலந்துக் கொள்ள ஏராளமான அணிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

ஆடுதாம் ஆந்திரா நிகழ்ச்சியை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குண்டூரில் உள்ள லாயல் பப்ளிக் ஸ்கூல் மைதானத்தில் இன்று துவக்கி வைத்தார். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜா மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி போட்டியை துவக்கி வைத்தார்.


அப்போது கிரிக்கெட் பேட்டை கையாள்வதில் அமைச்சர் ரோஜாவுக்கு தடுமாற்றம் ஏற்பட்டது.  இதனையடுத்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, கிரிக்கெட் பேட்டை கையாள்வது குறித்து ரோஜாவுக்கு கற்றுக் கொடுத்தார்.

இதன் பிறகு முதலில் பேட்டிங் விளையாடிய ரோஜா,  பின்னர் ஜெகன்மோகன் ரெட்டியை கிரிக்கெட் விளையாட அழைத்தார்.  அமைச்சரின் அழைப்பை ஏற்ற முதலமைச்சர், அனைவருடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Tags :
#ViralVideoAadudamAndhraAndhraCMandhrapradeshBattingCricketCricketGroundCricketTournamentInaugrationjaganmohanreddyNews7Tamilnews7TamilUpdatesRojaSportsMinisterSportsMinistrytournament
Advertisement
Next Article