For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய #Hezbollah | 4பேர் உயிரிழப்பு!

07:15 AM Oct 14, 2024 IST | Web Editor
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய  hezbollah   4பேர் உயிரிழப்பு
Advertisement

ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

காசாவுக்கு எதிரான போரில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, கடந்த சில நாட்களாக இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதற்கு, இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 65 பேர் காயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : T20W | இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் எக்ஸ் சமூக ஊடகத்தில் தகவல் வெளியிட்டது. அதில் தெரிவித்துள்ளதாவது :

"ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஏவிய ஆளில்லா விமானம் ஒன்று ராணுவ தளத்தின் மீது தாக்கியது. சம்பவத்தில், இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம். மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த நபர்களின் பெயர்களை பரப்ப வேண்டாம்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/IDF/status/1845580836818530547?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1845580836818530547%7Ctwgr%5E40fedc44aecce2a66838f96435ef71a49252a537%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2Fnews%2Fworld%2F4-israeli-soldiers-killed-in-hezbollah-attack-1126044
Tags :
Advertisement