For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#HemaCommittee | “உண்மை செருப்பு அணிவதற்குள், பொய் உலகப் பயணத்தை முடித்துக் கொள்ளும்”- மலையாள நடிகர் #Jayasurya பதிவு!

10:54 AM Sep 01, 2024 IST | Web Editor
 hemacommittee   “உண்மை செருப்பு அணிவதற்குள்  பொய் உலகப் பயணத்தை முடித்துக் கொள்ளும்”  மலையாள நடிகர்  jayasurya பதிவு
Advertisement

தன் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பொய், அதை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாக பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

Advertisement

மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக பல முறை பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் அடுத்தக்கட்ட நகர்வாக பல நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகர் சித்திக், இடவேள பாபு, கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, மணியம் பிள்ளை ராஜு உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் நடிகர் ஜெயசூர்யா தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை மினு முனீர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயசூர்யா மீது கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, 354, 354ஏ, 509 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், கடந்த 2013-ம் ஆண்டு எர்ணாகுளம் தொடுபுலாவில் நடந்த படப்பிடிப்பின்போது, நடிகர் ஜெயசூர்யாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை ஒருவர் காவல் துறை டிஜிபிக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். இந்த இ-மெயில் அடிப்படையில் திருவனந்தபுரம் கரமனா போலீஸார் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 சி-யின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகர் ஜெயசூர்யா தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“என் பிறந்தநாளுக்கு அன்புடனும், வாழ்த்துக்களுடனும் எங்களுடன் இணைந்த அனைவருக்கும் நன்றி. சில தனிப்பட்ட தேவைகள் காரணமாக கடந்த ஒரு மாதமாக குடும்பத்துடன் அமெரிக்காவில் இருந்தேன். இதற்கிடையில், எதிர்பாராத விதமாக என் மீது 2 பொய்யான மானபங்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இயற்கையாகவே அது மற்ற நபரைப் போலவே என்னை உடைத்தது. எனது குடும்ப உறுப்பினர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். என்னைத் தடுத்து நிறுத்திய அனைவருக்கும் அது ஒரு வலியாக மாறியது. நான் இறுதியாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்தேன். அடுத்து என்ன என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.

இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை எந்த மனசாட்சியும் இல்லாமல் யார் மீதும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கூறலாம். துன்புறுத்தல் என்ற தவறான குற்றச்சாட்டை எதிர்கொள்வது துன்புறுத்தலைப் போலவே வேதனையானது என்பதை நினைவில் கொள்வது நல்லது. உண்மை செருப்பு அணிவதற்குள், பொய் உலகப் பயணத்தை முடித்துக் கொள்ளும். ஆனால் இறுதி வெற்றி சத்தியத்தின் அடிப்படையில் தான் உறுதியாகும். அமெரிக்காவில் வேலை முடிந்தவுடன் திரும்பி வருவேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்டப் போராட்டம் தொடரும்.

எனக்கு நீதி அமைப்பு மீது முழு நம்பிக்கை உள்ளது. இந்த பிறந்தநாளை மிகவும் சோகமானதாக மாற்றியவர்களுக்கும் நன்றி. பாவம் செய்யாதவர்கள் கல்லெறியட்டும். பாவிகள் மீது மட்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement