For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடும் கடல் சீற்றம்!

11:02 AM Jul 04, 2024 IST | Web Editor
சென்னை பட்டினப்பாக்கத்தில் கடும் கடல் சீற்றம்
Advertisement

சென்னை பட்டினம்பாக்கத்தில் கடல் அலை சீற்றத்துடன் இருப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. 

Advertisement

தென்மேற்குப் பருவமழை கேரளா உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகின்றது. அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பகலில் நல்ல வெயிலும், இரவில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு மிக வேகமாக கடல் அலை வீசியது.

இதையும் படியுங்கள் : ரூ.66,690 கரண்ட் பில் - மும்பை குடியிருப்புவாசிக்கு ’ஷாக்’ கொடுத்த மின்சார வாரியம்!

அதிக கடல் சீற்றம் காரணமாக பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50மீ தொலைவுக்கு கடல் நீர் வெளியேறியது. முன்பு இருந்த கடற்கரை மணல், அலையால் அரிக்கப்பட்டு லூப் சாலை வரை கடல் அலை வீசி வருகிறது. மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் மாற்றி வைத்துள்ளனர்.

Tags :
Advertisement