For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இமாச்சல பிரதேச கனமழை: 77 பேர் உயிரிழப்பு, 190-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடல்!

08:24 PM Aug 03, 2024 IST | Web Editor
இமாச்சல பிரதேச கனமழை  77 பேர் உயிரிழப்பு  190 க்கும் மேற்பட்ட சாலைகள் மூடல்
Advertisement

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக 77 பேர் இதுவரை உயிரிழந்ததாகவும், 190-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு ஆகஸ்ட் 7 வரை மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பின் காரணமாக ஏற்பட்ட தொடர் கனமழையால் கடந்த 4 நாள்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நடைபெறும் சாலைகளில் மந்தி பகுதியில் 79 சாலைகளும், குலு பகுதியில் 38 சாலைகளும், சம்பாவில் 35 சாலைகளும், சிம்லாவில் 30 சாலைகளும், காங்க்ராவில் 5 மற்றும் கின்னார், லாஹால், ஸ்பிதி பகுதிகளில் தலா 2 சாலைகள் சேர்த்து மொத்தம் 191 சாலைகள் மூடப்பட்டதாக மாநில அவசர நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுக்க 294 மின்சார டிரான்ஸ்ஃபார்மர்களும், 120 நீர் வழங்கும் மையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இமாச்சல் சாலைப் போக்குவரத்துக் கழகம் கொடுத்தத் தகவலின் படி மொத்தமுள்ள 3,612 வழித்தடங்களில் 82 வழித்தடங்களில் பஸ் வசதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மிதமான மற்றும் கனமழை தொடர்ந்து மாநிலத்தின் சில பகுதிகளில் பெய்துவரும் நிலையில் நேற்றைய (ஆகஸ்ட் 2) தரவுகளின்படி, ஜோஹிந்தர் நகரில் அதிகபட்சமாக 85 மி.மீ மழை பெய்துள்ளது.

கடந்த ஜூன் 27-ம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து ஆகஸ்ட் 1 வரை மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 77 பேர் உயிரிந்ததாகவும், மாநிலத்திற்கு ரூ.655 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement