For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கனமழை எதிரொலி | பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
09:18 PM Jun 25, 2025 IST | Web Editor
கனமழை காரணமாக பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி   பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Advertisement

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : “ரயில் கட்டண உயர்வு இருக்கட்டும்… நீங்கள் இதையெல்லாம் சிந்திக்கவில்லையா?” – முதலமைச்சரின் ட்வீட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!

தொடர் கனமழை காரணமாக கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பி வருகிறது. பில்லூர் அணையின் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக உள்ளது. இந்த அணை மொத்த கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு நலன் கருதி பில்லூர் அணையில் இருந்து 15,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement