For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கனமழை எதிரொலி - கீழ இலுப்பைக்குளம் கண்மாய் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!

11:17 AM Dec 19, 2023 IST | Web Editor
கனமழை எதிரொலி   கீழ இலுப்பைக்குளம் கண்மாய் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அவதி
Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சமுசிகாபுரம் முருகன்பதி தெரு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட தெருக்களில் கீழ இலுப்பை குளம் கண்மாயிலிருந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளனர்.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி, தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பொதுமக்கள்  வெள்ள நீரில் சிக்கி உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள் : தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இயக்குநர் மாரிசெல்வராஜ்!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் முருகன்பதி தெரு, ஊரணி பட்டி தெரு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட தெருக்களில் கீழ இலுப்பை குளம் கண்மாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக வெளிவரும் தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளனர்.

இதையடுத்து, ஓடைநீர் அருகே உள்ள வீடுகளை சுற்றி சுமார் 3 அடி உயரத்திற்கு தேங்கிருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளிய செல்ல முடியாமல்  அவதிப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement