For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் கனமழை எதிரொலி! 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

06:29 PM Oct 15, 2024 IST | Web Editor
சென்னையில் கனமழை எதிரொலி  4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
Advertisement

பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து, ஈரோடு, திருப்பதி, மைசூரு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று(அக்.15) மாலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி - சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16058) ரயில் ரத்து செய்யப்பட்டது. இன்று(அக்.15) மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (16203) ரயிலும் ரத்து செய்யப்பட்டது. இன்று(அக்.15) இரவு 11 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று(அக்.15) இரவு 9.15 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - மைசூரு காவிரி எக்ஸ்பிரஸ் (16021) ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement