For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

10:00 PM Jul 13, 2024 IST | Web Editor
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு   வானிலை மையம் தகவல்
Advertisement

வரும் நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வானிலை குறித்து, வானிலை மையம் விரிவாக தெரிவித்திருப்பதாவது:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் ஜூலை 14 ஆம் தேதியான நாளை, தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஜூலை 15 ஆம் தேதி, 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மிக முன்னெச்சரிக்கையாக இருக்குமாரு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்ததாக ஜூலை 16 ஆம் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மேலும் , ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையில், அடுத்த 5 தினங்களுக்கு வங்க கடலில் காற்றின் வேகமானது அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Tags :
Advertisement