For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை | வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

09:09 AM Dec 19, 2023 IST | Web Editor
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை   வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
Advertisement

மதுரையில் பரவலாக பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதிகனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இதனிடையே மதுரையில் பரவலாக பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போர் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தும் குறிப்பிடத்தக்கது.

Advertisement