For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த ஹர்திக், குல்தீப்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்திக் மற்றும் குல்தீப் ஆகியோர் மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.
09:10 PM Feb 23, 2025 IST | Web Editor
சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த ஹர்திக்  குல்தீப்
Advertisement

8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக பாபர் அசாம் – இமாம் உல் ஹக் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பாபர் அசாம் 23 ரன்களிலும், இமாம் உல் ஹக்கும் 10 ரன்களிலும் வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். இதில் சவுத் ஷகீல் 62 ரன்களிலும், ரிஸ்வான் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து சல்மான் அலி ஆகா மற்றும் தையப் தாஹீர் ஜோடி சேர்ந்தனர். இதில் தையப் தாஹீர் 4 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் சல்மான் அலி ஆகா 19 ரன்னிலும், அடுத்து களம் புகுந்த ஷாகீன் ஷா அப்ரிடி ரன் எடுக்காமலும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் மாபெரும் சாதனைகளை படைத்துள்ளனர். அதாவது, இந்த ஆட்டத்தில் குல்தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட் + ஒருநாள் + டி20) 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். அதேபோல், இந்த ஆட்டத்தில் பாண்டியா 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட் + ஒருநாள் + டி20) 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement