For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!

10:39 AM Apr 09, 2024 IST | Web Editor
குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
Advertisement

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

Advertisement

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்,  தமிழ்நாடு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 151 குரூப்-2 மற்றும் 2 ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.  இதில், 161 இடங்கள் நேர்முகத் தேர்வைக் கொண்ட பணியிடங்களாகவும்,  5 ஆயிரத்து 990 காலி இடங்கள் நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களாகவும் பிரிக்கப்பட்டன.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இதற்கான முதல்நிலைத் தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர்.  இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 50 ஆயிரம் பேர்,  அடுத்தக்கட்டமான முதன்மைத் தேர்வை எதிர்கொண்டனர்.

இதனை தொடர்ந்து,  குரூப்-2 நேர்முகத் தேர்வு கொண்ட பணியிடங்களுக்கான முடிவுகள் மட்டும் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.  இந்த நிலையில்,  5 ஆயிரத்து 990 பணியிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

Tags :
Advertisement