For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாளை நடைபெறுகிறது குரூப் 1 முதல்நிலைத் தேர்வு!

09:23 PM Jul 12, 2024 IST | Web Editor
நாளை நடைபெறுகிறது குரூப் 1 முதல்நிலைத் தேர்வு
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் 797 மையங்களில் குரூப் 1 தேர்வு நாளை நடைபெறுகிறது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் 1 தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என நடைபெறும்.  இதில் முதல்நிலை தேர்வு நாளை காலை 9.30 மணி முதல் தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது.  இந்த முதல்நிலை தேர்வை 2.38 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதற்காக சென்னையில் மட்டும் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டியவை:

  • தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு சென்றிருக்க வேண்டும்.
  • காலை 9 மணிவரை மட்டுமே தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
  • தேர்வு மையத்திற்கு கட்டாயமாக அனுமதி சீட்டினை எடுத்துச்செல்ல வேண்டும்.
  • அதோடு, ஆதார் அட்டை/ பாஸ்போர்ட்/ ஓட்டுநர் உரிமம்/ பான் கார்டு/ வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஏதேனும் ஒன்றை எடுத்துசெல்ல வேண்டும்.
  • அனுமதி சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றாலோ, தேர்வர்கள் தன்னுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முறையாகக் கையொப்பமிட்டு, அனுமதிச்சீட்டின் நகல் மற்றும் அடையாள அட்டை நகலை இணைத்து, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சமர்பிக்க வேண்டும்.
  • ஓஎம்ஆர் தாளை கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும்.
  • தேர்வர்கள் தேர்வு அறைக்குள் கறுமை நிற பேனா, அனுமதிச்சீட்டு, அடையாள அட்டை மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர்.

தேர்வு அறையில் தேர்வு நடைமுறை விதிமுறைகளை தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் முறைகேட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குரூப் 1 தேர்வு நடைபெறுவதால் நாளை  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement