For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#GovtSchool ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை - பகுத்தறிவோடு கேள்வி எழுப்பிய ஆசிரியருக்கு #TNMinister அன்பில் மகேஸ் பாராட்டு!

11:01 AM Sep 06, 2024 IST | Web Editor
 govtschool ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை   பகுத்தறிவோடு கேள்வி எழுப்பிய ஆசிரியருக்கு  tnminister அன்பில் மகேஸ் பாராட்டு
Advertisement

அரசு பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவின்போது பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்களை கண்டித்து கேள்வி எழுப்பிய பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. மகாவிஷ்ணு என்பவர் 2 அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியிருக்கிறார். அப்போது இப்படி மதரீதியாக மாணவர்களிடம் பேச வேண்டாம் என மாற்றுத் திறனாளி ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். அதற்கு அந்த சொற்பொழிவாளரான மகாவிஷ்ணு மைக்கில் பேசி அவரை அவமானப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. யாருடைய அனுமதியில் இது போன்ற சொற்பொழிவாளரை அரசு பள்ளிகளுக்குள் அனுமதித்தார்கள் என ஆசிரியர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்று காலை அந்த பள்ளியின் முன் கூடி மூடநம்பிக்கையை வளர்க்கும் இது போன்ற நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:

உலகத்தில் புனிதமான இரண்டு அறைகள் ஒன்று உண்டு. அவற்றில் ஒன்று தாயின் கருவறை, மற்றொன்று பள்ளி வகுப்பறை. பெற்றோர், ஆசிரியர் என இருவரிடமும் நல்ல பிள்ளைகளாக பெயர் எடுக்க வேண்டும் , இது ஒட்டுமொத்தமாக நல்ல பிள்ளையாக உருவாகிறார்கள் என்று அர்த்தம். ஏகலைவன் தொலைவில் இருந்து தனது குருவிடம் பாடம் கற்றார். அதற்கு குரு அவரின் கட்டை விரலை குருதட்சனையாக கேட்டார்.

கல்வி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று சொன்னவர் பெரியார், பெண்கள் கல்வி அறிவை பெற வேண்டும் என்று சொன்னவர் பெரியார். நாம் நம் அறிவை சமூகத்திற்கு எப்படி பயன்படுத்த போகிறோம். விற்பனை பொருளாக சமூகம் நல்லதையும் வைத்திருக்கும் கெட்டதையும் வைத்திருக்கும், எதை ஏற்க வேண்டும் என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் அதற்கு கல்விதான் உதவும்.

எல்லாரும் படித்தவர்கள் தான் பட்டதாரிகள் தான் பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியருக்கு அறிவு கண்ணாக கல்வி இருந்ததால்தான் மேடையில் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பகுத்தறிவற்ற கருத்துக்களை யார் சொன்னாலும் எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார், அதனால்தான் அவர் இன்று என்னோடு ஒன்றாக மேடையில் உள்ளார் ” என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவின்போது சொல்லப்பட்ட கருத்துக்களை எதிர்த்து கேள்வி எழுப்பிய பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை நிகழ்ச்சி மேடையில் அமர வைத்து பெருமை படுத்தியது மட்டுமல்லாமல், அவர் எதிர்த்து கேள்வி கேட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு தெரிவித்தார்.

Tags :
Advertisement