For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு! - பொதுமக்கள் அதிர்ச்சி...!

10:50 AM Feb 01, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு    பொதுமக்கள் அதிர்ச்சி
Advertisement

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்திருந்தது.  இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்து காணப்பட்டது.  எனவே ஆந்திரா,  கர்நாடகா வியாபாரிகள் டெல்டா மாவட்டங்களில் தங்களுக்கு தேவையான நெல்லை வாங்கி சென்று கொண்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.  சென்னையில் 26 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 முதல்  ரூ.200 வரை அதிகரித்துள்ளது.

Advertisement